சீனா செல்கிறார் வெளியுறவு செயலர்

மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் 26 மற்றும் 27 தேதிகளில் சீனா செல்ல உள்ளார்.

எல்லையில் ரோந்து செல்வது தொடர்பான பிரச்னையில் இந்தியா சீனா இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், பல மாதங்கள் இரு நாட்டு ராணுவ வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டனர். இரு நாட்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வீரர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டனர்.

கடந்த ஆண்டு அக்., மாதம் ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேசியிருந்தார். கடந்த டிச., மாதம் பார்லிமென்டில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது எனக்கூறியிருந்தார்.

தொடர்ந்து சமீபத்தில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை, நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேசியிருந்தார்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சீனாவில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, இந்தியா வெளியுறவுத்துறை- சீனா துணை அமைச்சர் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல், பொருளாதாரம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பு உள்ளிட்ட இந்தியா சீனா இடையிலான உறவுகளுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பது தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது எனக்கூறியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...