சீனா செல்கிறார் வெளியுறவு செயலர்

மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் 26 மற்றும் 27 தேதிகளில் சீனா செல்ல உள்ளார்.

எல்லையில் ரோந்து செல்வது தொடர்பான பிரச்னையில் இந்தியா சீனா இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், பல மாதங்கள் இரு நாட்டு ராணுவ வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டனர். இரு நாட்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வீரர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டனர்.

கடந்த ஆண்டு அக்., மாதம் ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேசியிருந்தார். கடந்த டிச., மாதம் பார்லிமென்டில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது எனக்கூறியிருந்தார்.

தொடர்ந்து சமீபத்தில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை, நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேசியிருந்தார்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சீனாவில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, இந்தியா வெளியுறவுத்துறை- சீனா துணை அமைச்சர் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல், பொருளாதாரம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பு உள்ளிட்ட இந்தியா சீனா இடையிலான உறவுகளுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பது தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது எனக்கூறியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., ...

''தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் ப ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : இன்று மோடி வழங்குகிறார் பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா செல்ல உள்ளதாக ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வ ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வதந்தி ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்ட ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்டினார் பெருந்தகை என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...