நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை

”கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். அப்படி செய்யும்போதுதான், முழுமையாக கலப்படத்தை தவிர்க்க முடியும்,” என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரி மற்றும் கோவை அறம் அறக்கட்டளை சார்பில், நூல் வெளியீட்டு விழா, கல்லூரி அரங்கத்தில் நடந்தது.

கோவை அறம் அறக்கட்டளை தலைவர் ரகுராம் தொகுத்து எழுதிய, ‘மறைந்திருக்கும் மர்மம்’ என்ற, கலப்படத்தை கண்டறிவது தொடர்பான நுாலை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டனர்.

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

தமிழகத்தில், 2021ம் ஆண்டு மே முதல் 2022ம் ஆண்டு டிசம்பர் வரை, உணவு பாதுகாப்புத் துறையினர், 38 ஆயிரத்து 980 உணவு மாதிரிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில், 28 சதவீதம் மாதிரிகள், பயன்படுத்த முடியாத அல்லது தரம் இல்லாதவை என தெரியவந்துள்ளது. உலக அளவில், 2020ம் ஆண்டு, 4.20 லட்சம் பேர் கலப்பட உணவால் உயிரிழந்துள்ளனர். கலப்பட உணவை, உணவு பாதுகாப்புத்துறையினர்தான் கண்டுபிடிக்க வேண்டும் என, நாம் இருக்கக்கூடாது. கலப்பட பொருட்களை நாமே கண்டுபிடிக்கலாம்.

கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாமே கேள்வி எழுப்ப வேண்டும். அப்படி செய்யும்போதுதான், முழுமையாக கலப்படத்தை தவிர்க்க முடியும். 2023ம் ஆண்டு, உலக அளவில் கண்டறியப்பட்ட போலி பொருட்களில், 71 சதவீதம் போலிப் பொருட்கள் சீனாவில் உற்பத்தியானது என சர்வே கூறுகிறது.

நம் நாடு அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், இன்னும், 10 ஆண்டுகளில், புரதச்சத்து உணவிற்கு தட்டுப்பாடு ஏற்படும்.

வரும் 2047ல், இந்தியா, 55 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும். அதற்கு, நாம் வளர வேண்டும். ஒரு மனிதனின் வளர்ச்சியை போலவே நாட்டின் வளர்ச்சியும் இருக்கும். இப்போது நீங்களும் இளமையாக இருக்கிறீர்கள்; நாடும் இளமையாக உள்ளது.

இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...