தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான உண்மையாகிவிட்டது என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வெளியே 18 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். உதவி கோரிய அவரின் அலறலைக் கேட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தகவல் தெரிவிக்க, அந்த பெண் காப்பாற்றப்பட்டார்.
தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான உண்மையாகிவிட்டது, போதைப்பொருள் எளிதில் அணுகக்கூடிய பொருளாக மாறியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில், 2022 மற்றும் 2024க்கு இடையில், தமிழகத்தில் NDPS சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,122 மட்டுமே.
2021ல் (ஒரு வருடத்தில்) NDPS வழக்குகளில் மொத்தமாக 9,632 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா மற்றும் மெத்தாம்பெட்டமைன் விற்பனை அதிகரித்து வருகிறது, ஆனால் கைதுகளின் எண்ணிக்கை குறைகிறதே எப்படி?
போதைப்பொருள் வியாபாரிகளை சுதந்திரமாக நடமாட வைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு வேண்டுமென்றே மெத்தனமாகி விட்டதா? பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்வதற்குள் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ?
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |