திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம்

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: திருப்பரங்குன்றம் சரித்திரம் அமைச்சர் சேகர்பாவுக்கு தெரியுமா? 1926ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மலை முழுவதும் கோவிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பு அளித்துள்ளது. பிரிவி கவுன்சில் 1931ல், மலை கோவிலுக்கு சொந்தம் என்று தெளிவாக தீர்ப்பு கொடுத்துள்ளது. இதன் பிறகு பிரச்னை முடிந்தது. மலை கோவிலுக்கு தான் சொந்தம்.

ஆங்கிலேயர்கள் ஹிந்து மக்களுக்காக தற்காத்த கோவிலை, இப்பொழுது ஆட்சியில் இருக்கும் தி.மு.க.,வினர் கொடுப்பதற்கு தயாராக இருப்பது தான் வேடிக்கை. திருப்பரங்குன்றம் குறித்து பேசும் முன் அமைச்சர் சேகர்பாபு பிரிவி கவுன்சில் தீர்ப்பு விவரங்களை படிக்க வேண்டும். மலை முழுமையாக கோவிலுக்கு சொந்தம் என தீர்ப்பில் உள்ளது. அமைச்சர் சேகர்பாபு காவி உடை அணிந்து முருக பக்தர் என்று கூறினால் போதாது.

போலீசார் 300க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினரை வீட்டுக்காவலில் அடைத்து வைத்துள்ளனர். போலீசாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அந்தந்த ஊரில் பா.ஜ.,வினரை நீங்கள் வளர்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். தெருவில் எங்கள் கட்சியினர் பெரியாளாகி கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.,வினரை மக்கள் நாயகர்களாக கொண்டு வருவதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கும், போலீசாருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா மட்டும் தான் போரில் இரு ...

இந்தியா மட்டும் தான் போரில் இருந்து ஒதுங்கி வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கையில் ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்த ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்தியாவைக் குறை கூறுவது தவறான தகவல் தந்திரமாகும். ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கா மூழ்கடிக்க "அனுமதித்ததற்காக" ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த்தியாக இந்தியா ஆகும். 2023 க்கு முன்பு வெறும் 2 அல்லது 3% ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மா ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு – பிரதமர் மோடி உரை வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப் ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைக்கும் மோடி தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்ச ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளமாக விளங்கும் மகளிர் சக்தி * சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...