முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை

”இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், நீங்கள் இருக்க மாட்டீர்கள்,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எச்சரித்தார்.

அவர் அளித்த பேட்டி:

திருப்பரங்குன்றம் சரித்திரம், அமைச்சர் சேகர்பாபுவுக்கு தெரியுமா? கடந்த, 1926ம் ஆண்டு இதே பிரச்னை வந்தபோது, அங்கிருந்த சப்- ஜட்ஜ் அளித்த தீர்ப்பில், ‘திருப்பரங்குன்றம் கோவில், எந்த சந்தேகமுமின்றி தேவஸ்தானத்திற்கு சொந்தமானது; நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமானவை’ என, தெளிவாக கூறப்பட்டு உள்ளது.

அந்த வழக்கில் அப்பீலுக்கு சென்றபோது, இரு தரப்பினரும் சமாதானமாக செல்ல அறிவுறுத்தப்பட்டது.

ஆங்கிலேயர்கள், ஹிந்து மக்களுக்காக தற்காத்த ஒரு கோவிலை, தி.மு.க., கொடுக்க தயாராக இருக்கிறது. புதிதாக இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் பிரச்னையை ஆரம்பிக்கின்றனர். ஆடு எடுத்துச் சென்று சாப்பிடுகின்றனர்.

நள்ளிரவில் கைது

ஒரு எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க துப்பு இல்லை. இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என, அமைச்சர் ரகுபதி சொல்கிறார். அவர் அடக்கிய லட்சணத்தை பார்த்தோம்.

பெண்கள், குழந்தைகள் ஆகியோரிடம் தவறு செய்பவர்களை பிடிக்க வேண்டிய காவல் துறையை, பா.ஜ.,வினரை, 350 இடங்களில் நள்ளிரவில் கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்து உள்ளனர். அந்தந்த ஊரில் உள்ள பா.ஜ., தலைவர்களை, வளர்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

மதுரை ஐகோர்ட் தீர்ப்பு வந்த ஒரு மணி நேரத்தில், மக்கள் எழுச்சியோடு வந்துள்ளனர். காவி வேட்டி கட்டிக்கொண்டு முருக பக்தன், சிவபக்தன் என்று சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. சனாதன தர்மம், ஹிந்து தர்மம் வேறு இல்லை.

இஸ்லாமியர்கள் சகோதரர்கள் தான். பிரச்னையை ஏற்படுத்தியது யார்? இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என, ‘சீன்’ போட்டு சுற்றினால், உங்களை எப்படி அடக்க வேண்டும் என்பது, எங்களுக்கு தெரியும்; அடக்கிக் காட்டுவோம்.

அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதியாக இருப்பதால், மரியாதை தருகிறோம். வார்த்தைகள் சரியாக இருக்க வேண்டும்.

அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதியாக இருப்பதால், மரியாதை தருகிறோம். வார்த்தைகள் சரியாக இருக்க வேண்டும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...