‘இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான கலாசார உறவுகளை கொண்டுள்ளன’ என பிரதமர் மோடி பேசினார்.
தாய்லாந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பவுத்த மாநாட்டில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: பகவான் புத்தரின் போதனைகள் உலகை அமைதியான முறையில் வழி நடத்துகிறது. இந்தியாவுக்கும், தாய்லாந்துக்கும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான கலாசார உறவுகள் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பல துறைகளில் உறவுகள் மேம்பட்டு உள்ளன.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் வழிகாட்டுதலை பவுத்தம் வழங்குகிறது. பகவான் புத்தர் மீதான நமது மரியாதை இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளில் பிரதிபலிக்கிறது.
புத்த மதம் தொடர்பான புண்ணியத்தலங்களை இணைக்க இந்தியா சுற்றுலா உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
நாளந்தா மகாவிஹாரா வரலாற்றில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். கடந்த பத்தாண்டுகளில் புத்தரின் போதனைகளை உலக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக பல நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |