டில்லியில் பாஜக ஆட்சி : தலைவர்களின் கருத்து

27 ஆண்டுக்குப் பின், டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. டில்லியின் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்று கொண்டார். இது குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:

பிரதமர் நரேந்திர மோடி
டில்லி முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தாவுக்கு வாழ்த்துக்கள். இவர் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி தற்போது எம்.எல்.ஏ.வாகவும், முதல்வராகவும் உயர்ந்து உள்ளார். டில்லியின் வளர்ச்சிக்காக அவர் முழு வீச்சுடன் பாடுபடுவார் என்று நான் நம்புகிறேன்.

டில்லி முதல்வர், ரேகா குப்தா
வாக்குறுதியை நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் இலக்கு. பிரதமர் மோடியின் கனவை நிறை வேற்றுவது 48 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் பொறுப்பாகும்.

கோவா முதல்வர், பிரமோத் சாவந்த்
27 ஆண்டுகளுக்குப் பிறகு, டில்லி மக்களின் நலனுக்காக பாடுபட பா.ஜ.,வுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில், டில்லி மக்கள் வளர்ச்சிக்காக பா.ஜ.,வினர் பாடுபடுவார்கள்.

டில்லி அமைச்சர், மஞ்சிந்தர் சிங் சிர்சா
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவது எங்களது கடமை. டில்லியை மீண்டும் சுத்தமான குடிநீர் மற்றும் காற்று கொண்ட பகுதியாக மாற்றுவோம். யமுனை நதியை சுத்தம் செய்வோம்.

ராஜஸ்தான் முதல்வர், பஜன்லால் சர்மா

பா.ஜ., அரசு பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும்.

டில்லி அமைச்சர், பர்வேஷ் வர்மா
எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை மிக பொறுப்புடன் செய்வேன். நேர்மையுடன் பணியாற்றுவேன்.

பீஹார் துணை முதல்வர், விஜய் குமார் சின்ஹா
டில்லியின் வெற்றி நாட்டின் வெற்றி. இது நாட்டின் உணர்வுகளின் வெளிப்பாடு. பிரதமர் மோடி ஒரு பெண்ணை முதல்வராக ஆக்கியுள்ளார், அவர் அனுபவம் வாய்ந்தவர். அவர் சொல்வதைச் செய்கிறார்.

டில்லி அமைச்சர், கபில் மிஸ்ரா
பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நாங்கள் செயல்படுத்துவோம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...