கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் : முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

புதிய கல்வி கொள்கையை ஏற்க தமிழகம் மறுத்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார். ‘கல்வியை அரசியல் ஆக்க வேண்டாம்’ என முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கல்வியில் அரசியலைப் புகுத்தாதீர்கள். அரசியல் கருத்து வேறுபாடுகளை தாண்டி மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும். நமது மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியல் ஆக்க வேண்டாம்.

புதிய கல்வி கொள்கையை குறுகிய மனப்பான்மையுடன் பார்ப்பது பொறுத்தமற்றது. அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள் உயர வேண்டும். புதிய கல்வி கொள்கையின்படி எந்த மொழியையும் எந்த மாநிலத்திலும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை. தாய்மொழியில் தரமான கல்வி பெறுவதை புதிய கல்வி கொள்கை உறுதி செய்கிறது. புதிய கல்வி கொள்கை நமது மொழியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மையை பாதுகாக்க கொண்டு வரப்பட்டுள்ளது.

பா.ஜ., ஆட்சி செய்யாத மாநிலங்களும் புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. அரசியல் காரணங்களுக்காக, புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பதால், ஆசிரியர்கள், மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். காசி தமிழ் சங்கமம் மூலம் தமிழ் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ் மொழியை பிரதமர் மோடி உலகம் முழுவதும் பரப்பி வருகிறார்.

எந்தவொரு மாநிலத்திலும், எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை. 3வது மொழி விருப்பத்தின் அடிப்படையிலேயே தேர்வு செய்து கொள்ளலாம்.

சமூக மற்றும் சமூக முன்னேற்றத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மாணவர்கள் அவர்கள் விரும்பும் மொழியில் கல்வி கற்பதை புதிய கல்வி கொள்கை உறுதி செய்கிறது. அரசியல் காரணங்களுக்காக புதிய கல்வி கொள்கையை ஏற்று கொள்வதில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நர ...

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தால் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது: நயினார் நாகேந்திரன் ஆரூடம் “வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி விட்டால், இனி ...

நாட்டின் பாரம்பரியத்தை பிரதிப ...

நாட்டின்  பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனல் தூர்தர்ஷன் – மத்திய இணை அமைச்சர் ''நாட்டின் பொருளாதாரத்தில், படைப்பு பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது,'' என, ...

போதை பொருள் விற்பனையில் தமிழகம ...

போதை பொருள் விற்பனையில்  தமிழகம் முதலிடம் – எ ச் ராஜா தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன்ட்ரோல் – நயினார் நாகேந்திரன் ''2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமு ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...