டில்லியின் புதிய சபாநாயராக விஜேந்தர் குப்தா நியமனம்

புதுடில்லியின் சட்டசபையின் புதிய சபாநாயகராக பா.ஜ., மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான விஜேந்தர் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

புதுடில்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக முதல் முறையாக எம்.எல்.ஏ.,வான ரேகா குப்தா முதல்வராக அறிவிக்கப்பட முறைப்படி அவரும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

முதல்வர் பதவியை தொடர்ந்து சட்டசபையின் புதிய சபாநாயகர் யாராக இருப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந் நிலையில், புதிய சபாநாயகராக பா.ஜ., மூத்த தலைவரும், ரோகிணி தொகுதியில் போட்டியிட்டு வென்றவருமான விஜேந்தர் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

முதல்வர் ரேகா குப்தா அவரது பெயரை முன்மொழிய. அவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் விஜேந்தர் குப்தா தேர்வாகி இருக்கிறார்.

அவரின் தேர்வுக்கு முதல்வர் ரேகா குப்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது;

தேசிய தலைநகருக்காக அவர் நிறைய பணி செய்துள்ளார். 3 முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வாகி உள்ளவர். இந்த அவைக்கு அவரின் அனுபவம் தேவையானதாக இருக்கும். அவரின் தலைமையின் கீழ் உறுப்பினர்கள் தங்கள் குரலை முன் வைப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...