தமிழகத்தில் ஆட்சி மாற்றம் – 2026 ல் திமுக வுக்கு முடிவுரை சொல்கிறார் அண்ணாமலை

‘2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். 2026ல் தி.மு.க.,வுக்கு முடிவுரை எழுதப்படும்’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: லோக்சபா தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் செய்யாத நிலையில் அது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்டுவது தேவையில்லாதது. இதனால் தான் பா.ஜ., அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கிறது. எதற்காக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைக்கிறார் என தெரியவில்லை.

விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தொகுதி மறுவரையின் போது தமிழகத்திற்கு தொகுதிகளுடைய எண்ணிக்கை குறையாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இவ்வளவு தெரிவித்தும் தேவையில்லாமல் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தொகுதி மறு வரையறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசே உறுதி கூறியும், அதை நம்பாமல் முதல்வர் எந்த அடிப்படையில் தொகுதியில் எண்ணிக்கை குறையும் என்று தெரிவித்து வருகிறார்.

மீனவர்கள் பிரச்சனையை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஏற்கனவே பேசி உள்ளேன். விரைவில் ராமநாதபுரம், புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மீனவர்களுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து மீனவர்கள் கைது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளோம். இந்திய, இலங்கை அரசு இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மீனவர்கள் போர்வையில் சிலர் கடத்தலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதால் தான் புதிதாக பொறுப்பேற்ற இலங்கை அரசு தீவிரமாக தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. மேடை போட்டு பா.ஜ.,வினரை திட்டுவது தான் தி.மு.க.,வினரின் பிரதான வேலையாக உள்ளது. அமைச்சர் சேகர் பாபு நான் எங்கெல்லாம் வேலை செய்தேனோ அங்கெல்லாம் சென்று சோதனை செய்ய எனது சொந்த செலவில் அனுப்பி வைக்கிறேன்.

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். 2026ல் தி.மு.க.,வுக்கு முடிவுரை எழுதப்படும். தி.மு.க.,வை பொறுத்தவரை காலை எழுந்தவுடன் என்னை திட்டுவது தான் முதல் வேலையாக உள்ளது. பொதுக்கூட்டம் போட்டு பா.ஜ.,வை திட்டுவதற்கு தான் தி.மு.க.,வுக்கு நேரம் உள்ளது. மக்கள் பிரச்னை குறித்து பேசுவதற்கு அவர்களுக்கு நேரமில்லை. மும்மொழிக் கொள்கை தொகுதி வரையறை போன்ற தேவையில்லாத பிரச்னைகளை திமுக எழுப்பி வருகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...