ரூ433 லட்சம் கோடி பொருளாதார நாடாக இந்தியா மாறும் – பிரதமர் மோடி

”நம் நாடு, 433 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார நாடாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டில்லியில் நேற்று நடந்த பட்ஜெட்டுக்கு பிந்தைய வேலைவாய்ப்பு குறித்த இணையவழி கருத்தரங்கில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த 2014 முதல், 3 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 1,000 ஐ.டி.ஐ.,க்களை மேம்படுத்தவும், ஐந்து சிறப்பு மையங்களை அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

நம் நாடு, 329 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக மாறி உள்ளது. இது, 433 லட்சம் கோடி ரூபாயாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

திறன் மேம்பாடு, திறமை வளர்ப்பு ஆகியவை தேசிய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். இந்த துறைகளில் அதிக முதலீடு அவசியம்.

‘மக்களின் முதலீடு’ என்ற தொலைநோக்குப் பார்வை, கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு ஆகிய மூன்று துாண்களில் நிற்கிறது.

இந்த துறைகளில் முதலீடு செய்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து பங்குதாரர்களும் உதவ வேண்டும். சுற்றுலாவை மையமாக வைத்து, நாடு முழுதும் 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். இந்த இடங்களில் உள்ள ஹோட்டல்களுக்கு உட்கட்டமைப்பு அந்தஸ்து வழங்குவது, சுற்றுலாவை எளிதாக்கி உள்ளூர் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நர ...

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தால் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது: நயினார் நாகேந்திரன் ஆரூடம் “வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி விட்டால், இனி ...

நாட்டின் பாரம்பரியத்தை பிரதிப ...

நாட்டின்  பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனல் தூர்தர்ஷன் – மத்திய இணை அமைச்சர் ''நாட்டின் பொருளாதாரத்தில், படைப்பு பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது,'' என, ...

போதை பொருள் விற்பனையில் தமிழகம ...

போதை பொருள் விற்பனையில்  தமிழகம் முதலிடம் – எ ச் ராஜா தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன்ட்ரோல் – நயினார் நாகேந்திரன் ''2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமு ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...