விமான துறையில் முன்னேற்றம் – ராஜ்நாத் சிங்

”கடந்த பத்து ஆண்டுகளில் விமானத்துறை பெரும் முன்னேற்றம் அடைந்து உள்ளது,” என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.

பெங்களூரு, ஹெச்.ஏ.,எல்.,லில் உள்ள இந்திய விமான படையின், விண்வெளி மருத்துவ நிறுவனத்தை நேற்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். இவர் முன்னிலையில், ‘ஆல்பா டோகல்’ எனும் தனியார் நிறுவனம் தயாரித்த எல்.சி.ஏ., – எம்.கே., 1ஏ எனும் போர் விமானம் ஹெச்.ஏ.எல்., வசம் ஒப்படைக்கப்பட்டது. விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது:

உலகம் முழுதும் உள்ள பல தனியார் நிறுவனங்கள் விண்வெளி ஆராய்ச்சியில் இறங்கி உள்ளன. விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் விண்வெளித்துறை மருத்துவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நம் நாட்டின் விமானத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் விமான சந்தையில், நம் நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ல் இருந்து 159 ஆக உயர்ந்து உள்ளது. எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சி அடையும்.

விண்வெளியில், வீரர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு தீர்வு காண்பதை விண்வெளி மருத்துவம் முதன்மையாக கொண்டு உள்ளது. நம் நாட்டில் தயாரிக்கப்படும் அதிநவீன போர் வீமானமான ஏ.எம்.சி.ஏ.,வின் வடிவமைப்பு, மேம்படுத்துவது தொடர்பாக விண்வெளி மருத்துவ நிறுவனம் ஆலோசனை வழங்குவது பெருமையாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...