விமான துறையில் முன்னேற்றம் – ராஜ்நாத் சிங்

”கடந்த பத்து ஆண்டுகளில் விமானத்துறை பெரும் முன்னேற்றம் அடைந்து உள்ளது,” என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.

பெங்களூரு, ஹெச்.ஏ.,எல்.,லில் உள்ள இந்திய விமான படையின், விண்வெளி மருத்துவ நிறுவனத்தை நேற்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். இவர் முன்னிலையில், ‘ஆல்பா டோகல்’ எனும் தனியார் நிறுவனம் தயாரித்த எல்.சி.ஏ., – எம்.கே., 1ஏ எனும் போர் விமானம் ஹெச்.ஏ.எல்., வசம் ஒப்படைக்கப்பட்டது. விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது:

உலகம் முழுதும் உள்ள பல தனியார் நிறுவனங்கள் விண்வெளி ஆராய்ச்சியில் இறங்கி உள்ளன. விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் விண்வெளித்துறை மருத்துவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நம் நாட்டின் விமானத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் விமான சந்தையில், நம் நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ல் இருந்து 159 ஆக உயர்ந்து உள்ளது. எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சி அடையும்.

விண்வெளியில், வீரர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு தீர்வு காண்பதை விண்வெளி மருத்துவம் முதன்மையாக கொண்டு உள்ளது. நம் நாட்டில் தயாரிக்கப்படும் அதிநவீன போர் வீமானமான ஏ.எம்.சி.ஏ.,வின் வடிவமைப்பு, மேம்படுத்துவது தொடர்பாக விண்வெளி மருத்துவ நிறுவனம் ஆலோசனை வழங்குவது பெருமையாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...