பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி

‘பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமராக பதவியேற்ற பின், முதன்முறையாக, ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று (மார்ச் 17) டில்லியில் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகிய இருவரும் சந்தித்து பேச்சு நடத்தினர்.

இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர். இரு நாட்டு தலைவர்கள் மத்தியில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் பிரதமர் மோடி, நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியாவிற்கு வந்த நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை வரவேற்கிறேன். பிரதமர் லக்சன் நீண்ட காலமாக இந்தியாவுடன் தொடர்புடையவர். எங்கள் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான விவாதங்களை நடத்தினோம். பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம்.

வளர்ச்சியின் கொள்கையை நாங்கள் நம்புகிறோம். 2026ம் ஆண்டில் இந்தியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான விளையாட்டு உறவின் 100 ஆண்டுகளைக் கொண்டாடவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். சட்டவிரோத இடம்பெயர்வு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் கூறியதாவது: இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையே உறவுகளை வலுப்படுத்துவோம். பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியும், நானும் விவாதம் நடத்தினோம், என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நர ...

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தால் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது: நயினார் நாகேந்திரன் ஆரூடம் “வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி விட்டால், இனி ...

நாட்டின் பாரம்பரியத்தை பிரதிப ...

நாட்டின்  பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனல் தூர்தர்ஷன் – மத்திய இணை அமைச்சர் ''நாட்டின் பொருளாதாரத்தில், படைப்பு பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது,'' என, ...

போதை பொருள் விற்பனையில் தமிழகம ...

போதை பொருள் விற்பனையில்  தமிழகம் முதலிடம் – எ ச் ராஜா தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன்ட்ரோல் – நயினார் நாகேந்திரன் ''2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமு ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...