என் நண்பர் அதிபர் ட்ரம்ப் க்கு நன்றி ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்த மோடி பதிவு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு சொந்தமான ட்ரூத் சோஷியல் மீடியாவில் பிரதமர் மோடி இணைந்தார்.

அமெரிக்க தொகுப்பாளர் லெக்ஸ் பிரிட்மேனுடன், பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை 3 மணி நேரம் கலந்துரையாடினார். அப்போது, ‘டிரம்ப் துணிச்சலானவர்; சுயமாக முடிவெடுப்பவர்’ என்று பிரதமர் புகழாரம் சூட்டினார். இந்த வீடியோவை டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடக கணக்கில் பகிர்ந்தார். இது குறித்து ஆங்கில மீடியாக்களில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்பிற்கு சொந்தமான ட்ரூத் சோஷியல் மீடியாவில் பிரதமர் மோடி இணைந்தார். தனது முதல் பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரவிருக்கும் காலங்களில் இத்தளத்தில் ஆக்கபூர்வ உரையாடல்களில் ஈடுபட எதிர்பார்ப்புடன் உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது கலந்துரையாடல் வீடியோவை பகிர்ந்த டிரம்புக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘எனது நண்பர் அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. எனது வாழ்க்கைப் பயணம், உலகளாவிய பிரச்னைகள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.