ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் பிரதமர் மோடியை சசிதரூர் மீண்டும் பாராட்டியிருப்பது காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி., சசிதரூர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடியவர். இதனால் இவருக்கு கட்சிக்குள் எதிர்ப்பாளர்கள் அதிகம். முன்னாள் மத்திய அமைச்சரான இவர், சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பை பாராட்டினார். இதற்கு காங்., கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசை பாராட்டிய சசிதரூர், கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் செல்பி எடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைமையை மேலும் வெறுப்பேற்றினார்.
இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் பிரதமர் மோடியை சசிதரூர் மீண்டும் பாராட்டி உள்ளார்.
இது குறித்து சசி தரூர் கூறுகையில், ‘கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில், ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை விமர்சித்தவர்களில் நானும் ஒருவன். அதனால், ஏற்பட்ட கரையை இன்னமும் நான் துடைத்துக் கொண்டு தான் இருக்கிறேன். உக்ரைன், ரஷ்யா அதிபர்களை கட்டித் தழுவிய பிரதமர் மோடி, சமாதானத்தை வலியுறுத்தினார்,’ என்றார்.
இதன்மூலம், ஒரே மாதத்தில் பிரதமர் மோடியை சசிதரூர் 2வது முறையாக பாராட்டியுள்ளார்.
இது குறித்து பா.ஜ., ஐ.டி., பிரிவு தலைவர் அமித் மாள்வியா கூறுகையில், ‘ சர்வதேச அளவில் பிரதமர் மோடியின் அந்தஸ்தை காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொண்டதை பார்க்கையில் திருப்தியளிக்கிறது. சசிதரூரின் கருத்தால் ராகுலின் முகம் சிவந்து போயிருக்கும். பிரதமரை பாராட்டிய சசிதரூர் மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்காது என்று நம்புகிறேன்,’ எனக் கூறினார்.
சசி தரூர் இப்படி தொடர்ந்து பிரதமரை பாராட்டி வருவது, காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |