பீகாரில் லாலுவின் காட்டாட்சி வேண்டுமா முன்னேற்றம் தரும் ஆட்சி வேண்டுமா – அமித்ஷா பேச்சு

பீகாரில் காட்டாட்சி வேண்டுமா அல்லது முன்னேற்றத்தை தரும் அரசு வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.

பீகாரில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. முதல்வராக நிதிஷ்குமார் உள்ளார். அங்கு கூடிய விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

இந் நிலையில் கோபால்கன்ஜ் பகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;

பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. மாநிலத்தில் காட்டாட்சி வேண்டுமா அல்லது முன்னேற்றத்தை தரக்கூடிய பா.ஜ., அரசு வேண்டுமா? லாலு-ரப்ரியின் காட்டாட்சி வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

கடந்த 65 ஆண்டுகளில் செய்யாததை பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் செய்திருக்கிறார். எனவே மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டளியுங்கள். 5 ஆண்டுகளில் வெள்ளத்தில் பாதிக்கப்படாத மாநிலமாக பீகாரை மாற்றுகிறோம்.

மாநிலத்தில் லாலு-ரப்ரியும், மத்தியில் சோனியா-மன்மோகனும் பீகாருக்கு எதுவுமே செய்யவில்லை. ஆனால், பீகார் வளர்ச்சிக்காக 9 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...