ஜம்மு – காஷ்மீரில் ரயில் சேவை பிரதமர் மோடி ஏப்ரல் 19 ல் துவக்கம்

ரயில் போக்குவரத்தில் ஜம்மு – காஷ்மீரை, நம் நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கும் வகையில் முதல் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்., 19ம் தேதி துவக்கி வைக்கிறார்.

மலைப்பாங்கான பகுதியில் ஜம்மு – காஷ்மீர் அமைந்துள்ள நிலையில், அங்கு ரயில் போக்குவரத்தை இயக்குவது மிகுந்த சவாலாக உள்ளது. எனினும், இதை சாத்தியமாக்கும் வகையில் ஜம்மு – காஷ்மீரின் உதம்பூர் – ஸ்ரீநகர் – பாராமுல்லா இடையே உள்ள 272 கி.மீ., தொலைவு ரயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதில், கட்ரா – பானிஹால் இடையேயான 111 கி.மீ., தொலைவு உள்ள ரயில் இணைப்பின் பணி மட்டும் நிறைவுபெறாமல் இருந்தது.

இந்நிலையில், இத்திட்டம் முடிவுற்ற நிலையில், கடந்த ஜனவரியில், சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதைத்தொடர்ந்து, இந்த ரயில் திட்டத்தை, பிரதமர் மோடி ஏப்., 19ம் தேதி கட்ரா ரயில் நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாதா வைஷ்ணவதேவி கோவிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள கட்ரா பகுதியில் ரயில் நிலையம் திறக்கப்பட உள்ளதால், இங்கு வரும் ஏராளமான யாத்ரீகர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் வாயிலாக, ஸ்ரீநகர் வழியாக காஷ்மீருக்குள் ரயிலில் பயணம் செய்ய வழிவகை ஏற்படும். இதேபோல், நம் நாட்டின் பிற நகரங்களில் இருந்தும், ஜம்மு – காஷ்மீருக்கு ரயிலில் பயணிக்க இயலும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...