இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் சாதனை – பிரதமர் மோடி பாராட்டு

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக அதிகரித்து உள்ளது. இதற்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

பாதுகாப்புத்துறையில் வெளிநாடுகளை நம்பி இருந்த இந்தியா, அதனை மாற்றி தன்னிறைவு பெற செய்வது என இலக்கு நிர்ணயித்ததுடன், உள்நாட்டில் ஆயுதங்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்தது. இதன்படி ஏராளமான ஆயுதங்கள், தளவாடங்கள், அணு ஆயுதங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த நிதியாண்டில், வெடிமருந்துகள், ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் சார்ந்த துணை அமைப்புகள் உள்ளிட்டவற்றை இந்த நிதியாண்டில் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

ஆயுத தளவாடங்கள் ஏற்றுமதி மற்றும் அதனை ஆய்வு செய்வதற்கு ஏன பாதுகாப்பு உற்பத்தித்துறை தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்கி உள்ளது. அதில் கடந்த 2024- 25ம் நிதியாண்டில், 1,762 விண்ணப்பங்கள் வந்து உள்ளன. இது முந்தைய நிதியாண்டை காட்டிலும் 16.92 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2024- 25ம் நிதியாண்டில், இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக அதிகரித்து உள்ளது. இது 2023 – 24ம் நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட ரூ.21,083 கோடியைக் காட்டிலும் 12 சதவீதம்(ரூ.2,539) கூடுதல் ஆகும்.இந்த சாதனையை நிகழ்த்திய அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

2029ம் ஆண்டிற்குள் பாதுகாப்பு ஏற்றுமதிக்கு ரூ.50 ஆயிரம் கோடி இலக்கு என்பதை நோக்கி பிரதமர் மோடி தலைமையில் இந்தியா முன்னேறி வருகிறது.

இதற்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் உலகளாவிய தலைமைப்பண்பை நோக்கிய பயணத்தில் இது பெருமைமிக்க தருணம். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜ ...

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் ஆமதாபாத் விமான விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனிய ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனியாவது திருந்தட்டும்; நயினார் நாகேந்திரன் காட்டம் ''மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்'' என ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகள ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட வேண்டும்: மோடிக்கு அண்ணாமலை கடிதம் 2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்ப ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...