இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் சாதனை – பிரதமர் மோடி பாராட்டு

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக அதிகரித்து உள்ளது. இதற்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

பாதுகாப்புத்துறையில் வெளிநாடுகளை நம்பி இருந்த இந்தியா, அதனை மாற்றி தன்னிறைவு பெற செய்வது என இலக்கு நிர்ணயித்ததுடன், உள்நாட்டில் ஆயுதங்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்தது. இதன்படி ஏராளமான ஆயுதங்கள், தளவாடங்கள், அணு ஆயுதங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த நிதியாண்டில், வெடிமருந்துகள், ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் சார்ந்த துணை அமைப்புகள் உள்ளிட்டவற்றை இந்த நிதியாண்டில் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

ஆயுத தளவாடங்கள் ஏற்றுமதி மற்றும் அதனை ஆய்வு செய்வதற்கு ஏன பாதுகாப்பு உற்பத்தித்துறை தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்கி உள்ளது. அதில் கடந்த 2024- 25ம் நிதியாண்டில், 1,762 விண்ணப்பங்கள் வந்து உள்ளன. இது முந்தைய நிதியாண்டை காட்டிலும் 16.92 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2024- 25ம் நிதியாண்டில், இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக அதிகரித்து உள்ளது. இது 2023 – 24ம் நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட ரூ.21,083 கோடியைக் காட்டிலும் 12 சதவீதம்(ரூ.2,539) கூடுதல் ஆகும்.இந்த சாதனையை நிகழ்த்திய அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

2029ம் ஆண்டிற்குள் பாதுகாப்பு ஏற்றுமதிக்கு ரூ.50 ஆயிரம் கோடி இலக்கு என்பதை நோக்கி பிரதமர் மோடி தலைமையில் இந்தியா முன்னேறி வருகிறது.

இதற்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் உலகளாவிய தலைமைப்பண்பை நோக்கிய பயணத்தில் இது பெருமைமிக்க தருணம். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...