தொழில்முனைவோரை உருவாக்கியுள்ளது முத்ரா கடன் திட்டம்

“சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற தாகத்தை தணிப்பதுடன், நம் இளைஞர்களின் தொழில் திறன்களை, முத்ரா திட்டம் வெளிப்படுத்தியுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

‘நிதியற்றவர்களுக்கு நிதியளிப்பது’ என்ற நோக்கத்துடன் குறு, சிறு நிறுவனங்களை முறையான நிதி அமைப்புகுள் கொண்டு வந்து அவர் களுக்கு மலிவான கடன்களை வழங்கும் முத்ரா திட்டம், 2015 ஏப்., 8ல் துவக்கி வைக்கப்பட்டது.

பொதுத்துறை, கூட்டுறவு, தனியார் என, அனைத்து வங்கிகள் வாயிலாக தொழில்களை நடத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும், 20 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.

இதன் 10வது ஆண்டை யொட்டி, திட்டத்தின் பயனாளிகள் சிலருடன், பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில் உள்ள தன் இல்லத்தில் நேற்று கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது: முத்ரா திட்டத்தின் கீழ், இதுவரை 33 லட்சம் கோடி ரூபாய் பிணையில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற கோடிக்கணக்கான இளைஞர்களின் தாகம் தணிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடைய தொழில்முனைவோர் திறன்களை வெளிப்படுத்தியுள்ளது.

வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலை கொடுப்பவர்களாக திகழும் ஊக்கத்தை இளைஞர்களிடையே இந்த திட்டம் ஊட்டியுள்ளது.

இதுவரை கடன் பெற்றவர்களில் பாதி பேர், எஸ்.சி., – எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்.

மேலும், 70 சதவீதம் பேர் பெண்கள் என்பதை அறியும்போது, மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஒவ்வொரு முத்ரா கடனும், சுயமரியாதை, கவுரவம், வாய்ப்பு களை கொண்டுள்ளது.

மேலும், சமூகப் பங்களிப்பு மற்றும் பொருளாதார சுதந்திரத்தையும் அளிக்கிறது. இந்த கடன் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து, அதை மேலும் வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...