கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம்

நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய சவாலாக உள்ளது. இக்கழிவுகளை முறையாக அகற்றாமல் இருப்பது சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடுகளுக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான கராட், இந்த பிரச்சனையை எதிர்கொள்வதில் ஒரு முன்மாதிரியாக உருவெடுத்துள்ளது. சுகாதார மற்றும் உயிரி மருத்துவக் கழிவுகளை 100% பிரித்தல், சேகரித்தல் மற்றும் செயல்முறை மூலம், கராட் பயனுள்ள மற்றும் நிலையான கழிவு மேலாண்மைக்கு ஒரு அளவுகோலை உருவாக்கித் தந்துள்ளது. சானிட்டரி நாப்கின்கள், டயப்பர்கள் மற்றும் பிற சுகாதாரப் பொருட்கள் போன்ற சுகாதார கழிவுகளை முறையாக அகற்றுவதை உறுதி செய்வது என்பது கராட் நகரில் சுகாதார அபாயங்கள், சுற்றுச்சூழல் தீங்கு மற்றும் சமூகக் களங்கம் ஆகியவற்றைத் தடுக்க உதவியுள்ளது.

கராட்டில், மருத்துவமனைகள், வீடுகள் மற்றும் பிற பகுதிகளிலிருந்து நாள்தோறும் சுமார் 300 முதல் 350 கிலோ சுகாதார கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று, சுகாதாரக் கழிவுகள் குறித்து மக்களிடையே உள்ள மனத்தடைகளை அகற்றுவதாகும். முறையான சுகாதாரக் கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் மற்றும் முறையற்ற அகற்றலுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். பொறுப்புணர்வுடன் கழிவுகளை வகை பிரித்தல் மற்றும் அகற்றலை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகித்த பயிலரங்குகள், சமூக மக்கள் தொடர்பு திட்டங்கள் மற்றும் பொது சேவை அறிவிப்புகள் போன்ற முயற்சிகள் மூலம் குடியிருப்பாளர்களுக்கு கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான புதுமையான உத்திகளை நகரம் பின்பற்றி வருகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம ...

நமது ட்ரோன், ஏவுகணைகளால் தூக்கம் தொலைத்த பாக்.,: பிரதமர் மோடி ''நமது ட்ரோன்கள், ஏவுகணைகளை நினைத்து நீண்ட காலத்திற்கு பாகிஸ்தானால் ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ப� ...

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல் எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் � ...

ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை டில்லியில் ராணுவத் தலைவர்களுடன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூ� ...

எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம் ''சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்� ...

இந்தியா நிகழ்த்திய சாதனை உலகத்துக்கே ஒரு பாடம் பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' துவங்கிய பின், நாட்டு ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான� ...

மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் இருக்காது ''மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நாம் யார் ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...