கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம்

நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. இதற்காக கல்வியை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து உள்ளது ,” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டில்லியின் பாரத மண்டபத்தில் நடந்த கருத்தரங்கத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: 21வது நூற்றாண்டின் தேவையை எதிர்கொள்ள இந்தியாவின் கல்விஅமைப்பை நவீனப்படுத்ம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. சர்வதேச கல்வித் தரத்தை மனதில் வைத்தே தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டது.

ஆராய்ச்சியாளர்களை ஆதரித்து, கல்வி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினர் வழிகாட்ட வேண்டும். இன்றைய இளைஞர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில் முக்கியமான பங்களிப்புகளை அளிக்க இந்திய இளம் தலைமுறையினர் தயாராகி வருகின்றனர்.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு இரு மடங்காகி உள்ளது. 2013 -14 நிதியாண்டில் ரூ.60 ஆயிரம் கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு தற்போது 1.25 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. 6 ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு என மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

சேவை மற்றும் பொது நலத்துடன் வாழ்வதே உண்மையான வாழ்க்கை என வேதங்கள் கூறுகின்றன. அறிவியலும், தொழில்நுட்பமும் சேவைக்கான ஊடகங்களாக செயல்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

நான் ஏன் பழி ஏற்கவேண்டும்?

நான் ஏன் பழி ஏற்கவேண்டும்? நாடு முழுவதும் பலபகுதிகளில் இருக்கும் மோசமான சாலை மற்றும் ...

11 ஆண்டுகளில் பீகார் மிகப்பெரிய ...

11 ஆண்டுகளில் பீகார் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது நியூஸ் 18 இன் 'சப்சே படா தங்கல்' (‘Sabse ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...