இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர்

இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

தண்டனை
டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சர்வதேச நாடுகளின் ஆதரவை நாம் பெற்றுள்ளோம். பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என ஐ.நா., தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. கடந்த 7 ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டனர்.

பாகிஸ்தானுடனான நமது உறவு மற்றும் பிரச்னை என்பது நிச்சயம் இரு தரப்பானது. பல ஆண்டுகளாக இதே நிலைப்பாடு தொடர்கிறது. இதில் மாற்றம் ஏதும் இல்லை. பாகிஸ்தானுடன் பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரதமர் மோடி தெளிவாக கூறியுள்ளார். இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது. பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அவர்கள் மூட வேண்டும். என்னசெய்ய வேண்டும் என அவர்களுக்கு நன்றாக தெரியும். பயங்கரவாதம் குறித்து என்ன செய்ய வேண்டும் என அவர்களுடன் பேச தயாராக இருக்கிறோம்.

சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதகவே இருக்கும். காஷ்மீர் குறித்து விவாதிக்க வேண்டிய விஷயம் இருக்குமே ஆனால், அது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இருந்து அந்நாடு வெளியேறுவதே ஆகும். இது குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறோம்.

இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தை சிக்கலானது. எந்த வர்த்தக ஒப்பந்தமும் பரஸ்பரம் நலன் பயக்கும் வகையில் இருநாடுகளும் செயல்பட வேண்டும். வர்த்தக ஒப்பந்தத்தில் இதுவே எதிர்பார்க்கப்படும். அது செய்யப்படும் வரை, அது குறித்த எந்த கணிப்பும் சரியாக இருக்காது.

பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்ற நமது நோக்கத்தை நிறைவேற்றி விட்டோம். இந்த தாக்குதல் துவங்கிய போது, பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது மட்டுமே குறிவைத்தோம். ராணுவம் மீது அல்ல என்ற செய்தியை அனுப்பினோம். இதில் தலையிடாமல் விலகியிருக்கும் வாய்ப்பு பாகிஸ்தான் ராணுவத்திற்கு இருந்தது. ஆனால், அவர்கள் நல்ல அறிவுரையை ஏற்கவில்லை. 10ம் தேதி காலை அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட பெரிய பாதிப்பு குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச்சூடு நடத்துவது யார் என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜ ...

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் ஆமதாபாத் விமான விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனிய ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனியாவது திருந்தட்டும்; நயினார் நாகேந்திரன் காட்டம் ''மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்'' என ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகள ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட வேண்டும்: மோடிக்கு அண்ணாமலை கடிதம் 2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்ப ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...