”உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,” என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ரவிநாத் ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: இந்தியா யாரையும் வெறுத்தது கிடையாது. ஆனால், அதிகாரம் இருக்கும் போது தான் அன்பு மற்றும் நலன் குறித்த புரிதலை உலகம் கவனிக்கும். இதுதான் உலக நியதி. இந்த நியதியை மாற்ற முடியாது. எனவே உலகின் நலனுக்காக, நாம் சக்திவாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
நமது பலத்தை உலகம் பார்க்க வேண்டும்.உலக நலனே நமது மதம். இது தான் ஹிந்து மதத்தின் உறுதியான கடமை. பெரிய அண்ணனாக இந்தியா, உலகின் அமைதி மற்றும் நலனுக்காக பணியாற்ற வேண்டும். இலங்கை, நேபாளம் மற்றும் மாலத்தீவில் பிரச்னை ஏற்பட்ட போது, இந்தியா தான் முதலில் அவர்களுக்கு உதவியது. இந்தியாவில் தியாகத்திற்கான பாரம்பரியம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |