ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து தீவிர விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள ஒரு முன்மொழிவாகும். இதன்படி, நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களையும் ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்துவதை வலியுறுத்துவதாகும்.
இந்நிலையில் இக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் வல்லுநர்களுடன் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது:
அடிக்கடி தேர்தல்கள் நடத்துவது நிர்வாகத்திற்கு இடையூறாகவும், பொதுச் செலவினங்களை உயர்த்துவதாகவும் இருக்கிறது. ஆகவே
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து தீவிரமான விவாதம் நடத்தப்பட வேண்டும்.
மேலும் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அடிக்கடி தேர்தல்கள் நடப்பது அரசியல் தலைமை மற்றும் நிர்வாக இயந்திரத்தின் செயல்பாட்டை சீர்குலைப்பதாகவும், நீண்டகால கொள்கை முடிவுகளுக்கு இடமளிக்க மறுக்கின்றனர்.
இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் பேசினார்.
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |