பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா, பிரதான் மந்திரி உஜ்வாலா போன்ற திட்டங்கள் அதிக வரவேற்பைப் பெற்றன. இதுபோல பல வகையான திட்டங்கள் பல வகையான பயனாளிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் பல புதிய திட்டங்களும் மத்திய மோடி அரசாக் அறிமுகப்படுத்தப்படலாம். இந்நிலையில், கடந்த 11 ஆண்டுகளில் ஏழைகள் நலனுக்கான திட்டத்தை செயல்படுத்துவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகளால் மோடி அரசின் ஆட்சியின் கீழ் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா எனப்படும் வீட்டு வசதித் திட்டம், உஜ்வாலா யோஜானா எனப்படும் சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், ஜன் தன் யோஜனா எனப்படும் ஏழைகளுக்கான வங்கிக் கணக்கு திட்டம், ஆயுஷ்மான் பாரத் எனப்படும் காப்பீட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள் மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
மக்களுக்கான வீட்டுவசதி, சுத்தமான சமையல் எரிவாயு, வங்கிக் கணக்கு மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான வாய்ப்புகளை மேற்கூறிய திட்டங்கள் விரிவுபடுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்தத் திட்டங்களின் பலன்களை வெளிப்படையாகவும் திறமையாகவும் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் நேரடி பணப் பரிமாற்றம், மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திரன் மோடி குறிப்பிட்டுள்ளார். கிராமப்புறங்களில் மக்களின் மேம்பாட்டுக்காக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது X பதிவில், “நமது அரசின் முழுமையான வளர்ச்சியை நோக்கிய முயற்சிகள் மாற்றத்தக்க விளைவுகளுக்கு வழிவகுத்துள்ளன. மேலும் ஏழை மக்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு பயனளித்துள்ளன” என்று கூறியுள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில் பொதுமக்களுக்கு அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தப்படுவதன் மூலம் வறுமையின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு மத்திய மோடி அரசு பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றி அமைத்துள்ளன.
பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், பிரதமரின் சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், ஜன் தன் திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் வீட்டுவசதி, தூய்மையான சமையல் எரிவாயு, வங்கி சேவைகள், சுகாதாரப் பராமரிப்புக்கான வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளன. இந்த நலத்திட்ட உதவிகள் நேரடியாக மக்களை சென்றடையும் வகையில் டிஜிட்டல் பரிமாற்ற நடவடிக்கைகள், கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதையும் அரசு உறுதி செய்துள்ளது.
இதுபோன்ற திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நவடிக்கைகளால் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். மக்களுக்கு அனைத்து வசதிகள் கிடைக்கவும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கவும் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |