பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்:

”பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்” என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு, ராஜ்நாத் சிங் அளித்த பேட்டி: பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும். பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு நிதியுதவி அளிக்காமல் தனிமைப்படுத்த வேண்டும்.

பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். பயங்கரவாத உள்கட்டமைப்பின் அடித்தளத்தை அழிக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதால், இந்தியா பாகிஸ்தானுக்கு ராஜதந்திர ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பயங்கரமான பதிலடி கொடுத்துள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்பதற்காக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நாங்கள் நிறுத்தி வைத்திருக்கிறோம். இந்த முடிவு பாகிஸ்தானுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

பாகிஸ்தானில் உள்ள 80 சதவீத விவசாய நிலங்கள் சிந்து நதி நீர் ஒப்பந்தகளை நம்பியுள்ளது. பயங்கரவாதம் என்பது இந்தியாவின் பிரச்னை மட்டுமல்ல; இது ஒரு உலகளாவிய பிரச்னை. பயங்கரவாதத்தை அகற்ற, நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...