பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஜூன் 20ல் ஒடிசா செல்கிறார் பிரதமர்

பாஜக அரசின் முதலாமாண்டு விழாவிற்கான மாபெரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜூன் 20ல் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா செல்லவுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சியின் முதலாமாண்டு ஜூன் 12-ல் வருகிறது. ஆனால் முக்கிய விழா ஜூன் 20-ஆம் தேதி நடைபெறும், எனவே பிரதமர் மோடி அன்றைய தினம் மாநிலத்திற்கு வருகை தருவார் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் புஜாரி தெரிவித்தார்.

ஒடிசாவில் பாஜக தலைமையிலான மோகன் சரண் மஜ்ஹி அரசு அமைத்து ஜூன் 12ல் ஓராண்டு நிறைவுபெறுவதையடுத்து, மாபெரும் விழா நடத்த அரசு ஏற்பாடு செய்துவருகின்றது. பிரதமரின் நிகழ்ச்சி நிரலைக் கருத்தில் கொண்டு, முக்கிய விழா ஜூன் 20ல் நடைபெறும். இறுதி நிகழ்ச்சி நிரல் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, முதல்வர் மோகன் சரண் மாஜீ, சமீபத்தில் புது தில்லிக்கு வருகை தந்திருந்தபோது ​​ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும் ஆண்டு விழாவிற்குப் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் பிறருக்கு முறையான அழைப்பை விடுத்திருந்தார்.

ஆண்டு விழாக்களின் ஒரு பகுதியாக, அனைத்து ஒடிசா அமைச்சர்களும் மாஜி அரசின் முதலாமாண்டு விழா அட்டையை மக்களுக்கு வழங்க மாவட்டங்களுக்குச் செல்ல நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...