”தமிழகத்தில் எங்களுக்கு கூட்டணி கட்சிகளுடைய ஆட்சி. தமிழக முதல்வர் இ.பி.எஸ்., தான்” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவாரூரில் நிருபர்கள் சந்திப்பில், நயினார் நாகேந்திரன் கூறியதாவது: எங்களுக்கு கூட்டணி கட்சிகளுடைய ஆட்சி. தமிழக முதல்வர் இ.பி.எஸ்., தான். நான் ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகளை வைத்து இருந்தேன். எல்லா அணியும் (கட்சி) ஒன்றாக சேர வேண்டும்.
தே.மு.தி.க.,வும் எங்களுடன் கூட்டணிக்கு வர வேண்டும். அப்போது தான் தி.மு.க.,வை வெற்றி பெற முடியும். அதாவது நீங்கள் பார்க்கும் பார்வை வித்தியாசமாக இருக்கும். நான் பார்க்கும் பார்வை வித்தியாசமாக இருக்கும்.
அமித்ஷா எங்களுடைய கூட்டணி கட்சிகளின் ஆட்சி, இ.பி.எஸ்., தலைமையில் அமையும் என்று சொல்லி இருக்கிறார். எங்களுடைய கோரிக்கை. எல்லோரும் ஒன்று சேர வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |