”தமிழகத்தில் எங்களுக்கு கூட்டணி கட்சிகளுடைய ஆட்சி. தமிழக முதல்வர் இ.பி.எஸ்., தான்” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவாரூரில் நிருபர்கள் சந்திப்பில், நயினார் நாகேந்திரன் கூறியதாவது: எங்களுக்கு கூட்டணி கட்சிகளுடைய ஆட்சி. தமிழக முதல்வர் இ.பி.எஸ்., தான். நான் ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகளை வைத்து இருந்தேன். எல்லா அணியும் (கட்சி) ஒன்றாக சேர வேண்டும்.
தே.மு.தி.க.,வும் எங்களுடன் கூட்டணிக்கு வர வேண்டும். அப்போது தான் தி.மு.க.,வை வெற்றி பெற முடியும். அதாவது நீங்கள் பார்க்கும் பார்வை வித்தியாசமாக இருக்கும். நான் பார்க்கும் பார்வை வித்தியாசமாக இருக்கும்.
அமித்ஷா எங்களுடைய கூட்டணி கட்சிகளின் ஆட்சி, இ.பி.எஸ்., தலைமையில் அமையும் என்று சொல்லி இருக்கிறார். எங்களுடைய கோரிக்கை. எல்லோரும் ஒன்று சேர வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |