இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி

இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சென்றார்.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக, தலைநகா் நிகோசியாவில் சைப்ரஸ் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸ் மற்றும் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடரும் இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்கள் மத்தியில் பேசினர்.

அப்போது மோடி பேசியதாவது:

“எனக்கு வழங்கப்பட்ட மரியாதை எனது நாட்டுக்கு வழங்கப்பட்டதாக கருதுகிறேன். சைப்ரஸ் மற்றும் இந்தியாவுக்கு இடையே பிரிக்க முடியாத நட்பின் முத்திரையாக பார்க்கின்றேன்.

இரண்டு தசாப்தங்கள் இடைவெளிக்கு பிறகு சைப்ரஸுக்கு இந்திய பிரதமர் வருகை தந்திருப்பது, இரு நாட்டு உறவின் புதிய அத்தியாத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பாகும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கும், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இணைக்கவும் ஆதரவு அளிக்கும் சைப்ரஸுக்கு நன்றி.

பயங்கரவாதம், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தைத் தடுக்க இரு நாட்டு விசாரணை அமைப்பு இடையே உடனடி தகவல் பரிமாற்றத்துக்கான வழிமுறை உருவாக்கப்படும்.

இந்தியா – சைப்ரஸ் – கிரீஸ் நாடுகளின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பியா பொருளாதார வழித்தடம், அமைதி மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும்.

மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பியாவில் நடந்து வரும் மோதல்கள் கவலை அளிக்கிறது. இது போரின் சகாப்தம் அல்ல என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

சைப்ரஸில் தனது பயணத்தை இன்று முடித்துவிட்டு புறப்படும் மோடி, கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் நாளை பங்கேற்று பேசுகிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...