முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல்

மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு, மாநாடு வளாகத்தில் அறுபடை வீடுகளின் அருட்காட்சி நடைபெறுகிறது.

கோபுரம் முதல் மூலவர் வரை அறுபடை கோவில்களில் இருப்பது போல் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய அறுபடை வீடுகளில் வைத்து வழிபாடு நடத்திய வேல் வைக்க ஹிந்து முன்னணி திட்டமிட்டது.

கடந்த வைகாசி விசாகத்தன்று, அறுபடை வீடுகளில் வேல்கள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டன. நேற்று மாலை, 5:00 மணிக்கு அனைத்து வேல்களும் அருட்காட்சிக்கு கொண்டு வரப்பட்டது. கைலாய வாத்தியங்கள் முழங்க ஆறு குழுக்கள் அடங்கிய பக்தர்கள் பேரணியாக கொண்டு வந்து சன்னதியில் சேர்த்தனர். ‘அரோகரா’ கோஷம் முழங்க திரளான பக்தர்கள் வழிபட்டனர். பின், வேல் தீபாராதனை காட்டப்பட்டு அந்தந்த சன்னதி மூலவர் அருகே வைக்கப்பட்டது.

நாட்டுபுற கலைஞர்களின் குழுவை சேர்ந்த சிறுவன் முருகன் வேடமிட்டு, சோலைமலையில் வைத்து வழிபாடு நடத்திய வேல் ஏந்தி வந்தார். அங்கிருந்த பக்தர்கள் முருகனே நேரில் வந்ததாக எண்ணி வேடமிட்டிருந்த சிறுவனை வணங்கினர். அவர் மேடையில் வேல் ஏந்தி நடனம் ஆடினார். பின், பக்தர்கள் இணைந்து ‘கந்த சஷ்டி கவசம்’ பாடினர்.

மாநாட்டிற்கு வருவோரின்நலன் கருதி மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.மாநாடு அரங்கத்திற்குள்ளே, வெளியேறும் வாயில்கள், வி.ஐ.பி., மேடை மற்றும் மேலுார், திருமங்கலம் டோல்கேட்டுகள் ஆகிய இடங்களில், நெடுஞ்சாலை மீட்புக்குழு உள்ளிட்ட, 13 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹிந்து முன்னணி மருத்துவக்குழு ஒருங்கிணைப்பாளர் ராம்பிரசாத் கூறுகையில், ”ஒவ்வொரு குழுவிலும் ஒரு ஆம்புலன்சுடன் டாக்டர், அவசர சிகிச்சை தொழில்நுட்பனர்கள், நர்சுகள், தன்னார்வலர்கள் இருப்பர். மாநாடு நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள தனியார் மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...