ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள்

ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், தென்ஆப்ரிக்கா, தென்கொரியா, மெக்சிகோ தலைவர்களுக்கு இந்திய கலைப்பொருட்களை பரிசாக வழங்கினார்.

ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த பரிசுப் பொருட்கள் குறித்த ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடா நாட்டில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது, கனடா நாட்டு பிரதமர் மார்க் கார்னிக்கு பித்தளையால் செய்யப்பட்ட போதி மர சிலையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். கனடாவின் ஆளுநருக்கு வெள்ளியால் செய்யப்பட்ட பர்ஸையும் பரிசாக அளித்தார்.

இதேபோல், ராஜஸ்தானில் செய்யப்பட்ட மரத்தால் ஆன கலைப்பொருளை அல்பர்டா மாகாணத் தலைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அந்நாட்டு துணைநிலை ஆளுநருக்கு தங்க இழைகளால் செய்யப்பட்ட பெட்டி அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் செய்யப்பட்ட நந்தி சிலை, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு அளிக்கப்பட்டது. கோனார்க் கோயில் சிற்பத்தின் மாதிரி ஜெர்மன் பிரதமருக்கும், மகாராஷ்டிராவில் செய்யப்பட்ட வெள்ளி குடுவை ஆஸ்திரேலிய பிரதமருக்கும் அளிக்கப்பட்டது

மூங்கிலில் செய்யப்பட்ட கப்பல் வடிவ கலைப் பொருள், பிரேசில் அதிபருக்கு இந்தியா சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. சத்தீஸ்கரில் கைவினைஞர்கள் உருவாக்கிய பித்தளை குதிரை சிலை தென்ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோசாவுக்கு அளிக்கப்பட்டது. தென்கொரிய அதிபருக்கு மதுபானி வகை ஓவியத்தையும், மெக்சிகோ அதிபருக்கு வார்லி ரக ஓவியங்களையும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...