யோகா என்பது உள்ளுணர்வின் மூலம் ஆன்மாவை உணர்ந்து கொள்ளும் பயணம்

மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் (மெப்ஸ்) என்ற சிறப்பு பொருளாதார மண்டலம் அதன் வழக்கமான செயல்பாடுகளில் இருந்து சிறிது விலகி, அமைதி, வலிமை மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றின் புத்துணர்ச்சிக்கான தருணமாக யோகா பயிற்சியில் ஈடுபட்டது. உலக அளவில் இந்த ஆண்டு சர்வதேச யோகா தினமானது “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா” என்ற கருப்பொருளுடன் உற்சாகம் மற்றும் நெறிமுறையுடன் கொண்டாடப்பட்டது.

இந்த ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் பணிபுரியும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், புவியின் நலவாழ்வையும், கலை உணர்வுடன் பிரதிபலிக்கும் வகையில் யோகா பயிற்சி நடைபெற்றது. காலையில் நடைபெற்ற யோகப் பயிற்சியில், ஊழியர்கள், பணியாளர்கள், அதிகாரிகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த அமர்வு, யோகாவின் முழுமையான வலிமையை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சி மெட்ராஸ் ஏற்றுமதி மண்டலத்தின் துணை மேம்பாட்டு ஆணையர் திருமதி ஜெனிஃபர் வரவேற்பு உரையுடன் தொடங்கியது. குறிப்பாக, இன்றைய பரபரப்பான பணிச்சூழலில், உடல், மனம், உணர்வு ஆகியவற்றுக்கு புத்துணர்வு அளிப்பதற்கும் நலவாழ்வுக்கும் யோகப் பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

சான்றளிக்கப்பட்ட யோகா பயிற்றுவிப்பாளரின் நிபுணத்துவ வழிகாட்டுதலின் கீழ், யோக பயிற்சிகள், ஆசனங்கள் மூச்சுப் பயிற்சியை அவர்கள் மேற்கொண்டனர். பின்னர் அமைதி மற்றும் கூட்டு தியான பயிற்சியுடன் இந்த அமர்வு நிறைவு பெற்றது. நெகிழ்வுத்தன்மை, தோற்றம், மனத் தெளிவு மற்றும் மன அழுத்த மேலாண்மை ஆகியவற்றின் நன்மைகளை இந்த யோகப் பயிற்சி வலியுறுத்துவதாக அமைந்தது.

இந்த நிகழ்ச்சியில் நன்றி உரையாற்றிய மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தின் துணை மேம்பாட்டு ஆணையர் திரு பிரபு குமார், ஊழியர்களின் நலவாழ்வை மேம்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்த அமைப்பாளர்கள், பயிற்றுநர்கள், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அவர் பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.

பிற்பகலில் யோகக் கலையின் வலிமையை எடுத்துரைக்கும் வகையில், வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்களின் யோகப் பயிற்சி, தத்துவம் மற்றும் நலவாழ்வை மையமாக கொண்ட கேள்விகள் இடம்பெற்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...