8 நாட்கள் பயணம்: 5 நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கவும், உலகின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகளுடன் உறவை மேம்படுத்தவும், 8 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜூலை 2 முதல் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்லும் பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து கானா, ட்ரினிடாட் மற்றும் டுபாக்கோ, அர்ஜென்டினா, நமீபியா நாடுகளுக்கு செல்ல உள்ளார்.

முதலாவதாக ஜூலை 2 முதல் 3 வரை கானாவில் சுற்று பயணம் மேற்கொள்கிறார். இந்த நாட்டிற்கு பிரதமர் மோடி முதல்முறையாக செல்கிறார். கடந்த 3 தசாப்தங்களில் கானா நாட்டிற்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெறுகிறார். அந்நாட்டு அதிபரை சந்தித்து, இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கும் மோடி, பொருளாதாரம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கிறார்.

இதன் பிறகு, 2 நாள் பயணமாக ட்ரினிடாட் மற்றும் டுபாக்கோவுக்கு செல்கிறார். 1999ம் ஆண்டுக்கு பிறகு அங்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமை மோடியை சாரும். அந்நாட்டு அதிபர் கிறிஸ்டைன் கர்லா மற்றும் பிரதமர் கமலா பிரசாத் ஆகியோரை சந்திக்க உள்ளார். அந்நாட்டு பார்லிமென்டின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

3வது நாடாக அர்ஜென்டினாவுக்கு ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டு அதிபர் ஜாவியர் மிலாயை சந்திக்கும் மோடி, பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய் மற்றும் காஸ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவை குறித்து ஆலோசிக்கிறார்.

இதன் பின்னர் பிரேசில் அதிர் லூயிஸ் இனாசியோ லூலா சில்வா அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு மோடி செல்கிறார். அங்கு 5 முதல் 8 ம் தேதி வரை தங்கி உள்ள அவர், அந்நாட்டு அதிபருடன் வர்த்தகம், பாதுகாப்பு , எரி்சக்தி,, விண்வெளி, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும்சுகாதாரம் குறித்தும் ஆலோசிக்க உள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கும் மோடி, சர்வதேச அமைப்புகளின் சீர்திருத்தம், அமைதி, பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், பொருளாதார பிரச்னைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கிறார். மாநாட்டிற்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்திக்கிறார்.

கடைசியாக நமீபியா செல்கிறார். அந்நாட்டு அதிபருடன் இரு தரப்புஉறவுகள் குறித்து விவாதிக்க உள்ளார். பிரதமர் மோடி 3வதுமுறையாக நமீபியா செல்ல உள்ளார்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...