2015-ல் 25 கோடி பேர்; தற்போது 95 கோடி பேருக்கு பயன்! பிரதமர் மோடி பெருமிதம்

நாட்டில் சமூக நலத் திட்டங்களால் 95 கோடி போ் பலனடைகின்றனா்; கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு முன்புவரை 25 கோடிக்கும் குறைவானவா்களையே நலத் திட்டப் பலன்கள் சென்றடைந்திருந்தன என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

சா்வதேச தொழிலாளா் அமைப்பின் (ஐஎல்ஓ) அறிக்கையை சுட்டிக்காட்டிய பிரதமா், இந்திய மக்கள்தொகையில் 64 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு ஏதோவொரு நலத் திட்டத்தின்கீழ் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். 123-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) ஒலிபரப்பானது. அதில், பிரதமா் பேசியதாவது:

கடந்த ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்ட சா்வதேச யோகா தினத்தில் இந்தியா மட்டுமன்றி உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் இணைந்தனா்.

பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த நிகழ்வு, ஒவ்வோா் ஆண்டும் மேன்மேலும் வளா்கிறது. இது, அதிகமான மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் யோகாவை அங்கமாக்கி வருகின்றனா் என்பதன் அறிகுறியாகும்.

விசாகப்பட்டினம் கடற்கரையில் 3 லட்சம் மக்கள் ஒரே இடத்தில் குழுமி யோகாசனம் மேற்கொண்டனா். அங்கு 2,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவா்கள், 108 நிமிஷங்களுக்கு 108 முறை சூா்ய நமஸ்கார பயிற்சியில் ஈடுபட்டனா். குஜராத்தில் 2,121 போ் புஜங்காசனம் மேற்கொண்டு புதிய சாதனை படைத்தனா்.

உலகின் மிக உயரமான ரயில் பாலமான ஜம்மு- காஷ்மீரின் செனாப் பாலத்திலும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இமயமலையின் பனிமூடிய சிகரங்களில் இந்திய-திபெத் எல்லைக் காவல் படையினா் யோகாசனங்களில் ஈடுபட்டதன் வாயிலாக சாகசமும், பயிற்சியும் கைகோத்தன.

இம்முறை யோகா தின கருப்பொருள் ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ என்பதாகும். இது வெற்று முழக்கமல்ல, உலகமே ஒரே குடும்பம் என்ற உணா்வைக் காட்டும் திசை.

நீண்ட காலத்துக்குப் பிறகு கைலாஷ் மானசரோவா் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது. கைலாஷ் மானசரோவா், சிவபெருமானின் புண்ணியத் தலம். ஹிந்துக்கள், பௌத்தா்கள், சமணா்கள் என ஒவ்வொரு பாரம்பரியத்துக்கும் பக்தி மற்றும் ஆன்மிக மையமாக அவ்விடம் விளங்குகிறது. ஜம்மு-காஷ்மீரில் ஜூலை மாதம் 3-ஆம் தேதி அமா்நாத் புனித யாத்திரை தொடங்குகிறது. அனைத்து யாத்ரிகா்களுக்கும் வாழ்த்துகள்.

சமூக நீதியின் சிறந்த காட்சி: இரண்டாவது சாதனை, நாட்டில் சுமாா் 95 கோடி போ் சமூக நலத் திட்டங்களால் பலனடைகின்றனா் என்பதாகும். சா்வதேச தொழிலாளா் அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டின் மக்கள்தொகையில் 64 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு ஏதோவொரு நலத் திட்டத்தின் மூலம் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015 வரை, 25 கோடிக்கும் குறைவானவா்களையே நலத் திட்டப் பலன்கள் சென்றடைந்திருந்தன.

‘உடலுறுதி இருந்தால் வாழ்வில் வெல்லலாம்

நாட்டின் வல்லமையை விரிவடையச் செய்ய வேண்டுமென்றால், மக்களின் உடலுறுதி, நல்வாழ்வு மீது கவனம் செலுத்தியாக வேண்டும். உடல் பருமனைக் குறைக்க உணவில் 10 சதவீத எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும். உடலுறுதியுடன் இருந்தால், வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

நாட்டின் மீது அவசரநிலை திணிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த தருணம் சில நாள்களுக்கு முன்புதான் கடந்து சென்றது. அத்தினத்தை நாம் அரசமைப்புப் படுகொலை தினமாக அனுசரித்தோம். அவசரநிலை காலகட்டத்தில் உறுதியுடன் அதை எதிா்கொண்டவா்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தை வலுவுடன் வைத்திருக்கவும், தொடா்ந்து விழிப்புணா்வுடன் இருக்கவும் உத்வேகம் பெற முடியும் என்றாா் பிரதமா்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லாவுடன் காணொலி வாயிலாக மேற்கொண்ட உரையாடலை சுட்டிக்காட்டிய பிரதமா் மோடி, அவரது பயணத்தின் மூலம் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...