பிரேசிலின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி

பிரேசில் நாட்டின் உயரிய விருதான ‘தி க்ராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்’ (The Grand Collar of the National Order of the Southern Cross) என்ற விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட அவர், இது தனக்கு சற்று உணர்ச்சிப்பூர்வமான தருணம் எனக் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு வாரகால பயணமாக கானா, டிரினிடாட் & டுபாகோ, அர்ஜெண்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். பிரேசிலில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட மோடி, பயங்கரவாதிகளுக்கு எதிரான கண்டனம், அமெரிக்க வரி விதிப்புக்கு எதிரான விவாதம் உள்ளிட்டவற்றில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருதான ‘க்ராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்’ என்ற விருது நேற்று வழங்கப்பட்டது. பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, இந்த விருதை மோடிக்கு வழங்கி ஆரத்தழுவி வாழ்த்தினார். 2014-இல் பிரதமராக மோடி பதவியேற்றது முதலாக, அவருக்கு கிடைத்த 26வது சர்வதேச அங்கீகாரமாக இந்த விருது பார்க்கப்படுகிறது.

விருது பெற்றிருப்பது குறித்து பேசிய மோடி, “இந்த சிறப்புமிக்க கௌரவத்திற்காக, பிரேசில் நாட்டு அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும், இந்தியா – பிரேசில் இடையேயான உறவுக்கும் அர்ப்பணிக்கிறேன். பிரேசிலின் உயரிய விருதை பெறுவது எனக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் உணர்ச்சிகரமான தருணமாக நான் பார்க்கிறேன்.

பிரேசில் அதிபர் லூலாவுக்கும், அந்நாட்டு அரசாங்கத்துக்கும், பிரேசில் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது பிரேசில் மக்கள் இந்தியர்களின்மீது கொண்டுள்ள ஆழமான அன்பை காட்டுகிறது” எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது பிரேசில் அதிபருடன், நரேந்திர மோடியும் இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, ஆப்பிரிக்காவின் கானா நாட்டுக்கு சென்றிருந்த மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ‘தி ஆபீஸர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் தி கானா’ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...