இருதரப்பு முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சி; சிங்கப்பூர் துணை பிரதமரை சந்தித்த ஜெய்சங்கர் நெகிழ்ச்சி

இருதரப்பு முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது என சிங்கப்பூர் துணை பிரதமரை சந்தித்த பின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.

சிங்கப்பூர் மற்றும் சீனாவிற்கு மூன்று நாள் பயணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங்கை சந்தித்து ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக, ஜெய்சங்கர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேபல்வேறு இருதரப்பு முயற்சிகளில் நிலையான முன்னேற்றத்தைக் கவனிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 3வது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசை மாநாட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் பயணத்தைத் தொடர்ந்து, ஜெய்சங்கர், சீன நகரமான தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா செல்வார். சீனாவில், நாளை (ஜூலை 14), நாளை மறுநாள் (ஜூலை 15) ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடக்கிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...