பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: நயினார் நாகேந்திரன் ஆதரவு

‘தேர்தல் நேரத்தில், நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், ஆட்சி கட்டிலில் ஏறியதும், அதிகாரிகளை பேச விட்டு, தி.மு.க., அரசு அலட்சியத்துடன் அமர்ந்திருப்பதும் நியாயமா?’ என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தொடர்ந்து, எட்டு நாட்களாக பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தம் கோரி போராடி வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை தி.மு.க., அரசு கண்டுகொள்ளாது அலட்சியம் காட்டுவதுடன், கைது செய்து வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது.

பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோருவது தவறா?

தேர்தல் நேரத்தில் மட்டும், நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், ஆட்சி கட்டிலில் ஏறியதும், அதிகாரிகளை பேச விட்டு, அலட்சியத்துடன் அமர்ந்திருப்பதும் நியாயமா? தங்கள் உரிமைக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும், ஆசிரியர்கள் போராடட்டும் என, அலைக்கழிப்பதால், அரசு பள்ளி மாணவர்களின் நலனும் பாதிக்கப்படும் எனும் அடிப்படை உண்மையை கூட உணர இயலாதா?

ஆசிரியர்கள், மாணவர்கள் என, அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசு. ‘நாடு போற்றும் நல்லாட்சி’ என்று விளம்பரம் செய்வதை விட்டுவிட்டு, உடனே பகுதி நேர ஆசிரியர்கள், மாணவர்களின் நலனை காக்கும் பொருட்டு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

இல்லையெனில், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, இன்று, போராட்ட களத்தில் இருப்போருக்கு தமிழக பா.ஜ., துணை நிற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...