ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு

விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய யோஜனா திட்டத்திற்கு, இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.v

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

இந்த திட்டம், 2025-26 முதல் 6 ஆண்டு காலத்திற்கு, ஆண்டுக்கு ரூ.24,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

முதற்கட்டமாக நாட்டின் 100 மாவட்டங்களில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் விரைவான வளர்ச்சியை அடைவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், லட்சிய மாவட்டங்கள் திட்டத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டது. விவசாய உற்பத்தித்திறன், பயிர் பல்வகைப்படுத்தல், நீர்ப்பாசனம் மற்றும் கடன் கிடைக்கும் தன்மையை மேம்படுத்த, 11 அமைச்சகங்களின் 36 திட்டங்களை ஒன்றிணைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் குறைந்த உற்பத்தித்திறன், மிதமான பயிர் அடர்த்தி மற்றும் சராசரிக்கும் குறைவான கடன் அணுகல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் குறைந்தது ஒரு மாவட்டமாவது தேர்ந்தெடுக்கப்படும்.

மாநிலத் திட்டங்கள் மற்றும் தனியார் துறையுடன் கூட்டாண்மை மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தத் திட்டம் நாடு முழுவதும் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்படும்.

அதே நேரத்தில் கள வருகைகள், மதிப்பாய்வுகள் மற்றும் கண்காணிப்புக்காக மத்திய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...