டி.ஆர்.எப். மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா பாராட்டு; வலுவான ஒத்துழைப்பு என வரவேற்பு

டி.ஆர்.எப்.,க்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை, இரு நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வலுவாக உறுதிப்படுத்துகிறது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பஹல்காம் தாக்குதலைத தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்(The resistance Front) எனப்படும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்பானது, பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பாகும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அழுத்தம் காரணமாக, தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு, அந்த அமைப்பினர் சர்வதேச பயங்கரவாதிகள் என்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

டி.ஆர்.எப். அமைப்புக்கு எதிரான இந்த நடவடிக்கை பயங்கரவாத இயக்கங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக கருதப்படுகிறது. இந் நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை இந்தியா அதிகாரப்பூர்வமாக வரவேற்று இருக்கிறது.

இந்த நடவடிக்கையானது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியா, அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு வலுவாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

ஏப்.22ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற டி.ஆர்.எப்., அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவை பாராட்டுகிறோம். பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளவே முடியாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...