சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

நம் நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு, இங்கு சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.

இது தொடர்பாக கிரண் ரிஜிஜூ அளித்த பேட்டி:

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த நாட்டில் சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பெரும்பான்மையினரின் சுதந்திரமும் பாதுகாப்பும் சிறுபான்மையினருக்குக் கிடைக்கிறது.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், நாட்டை விட்டு வெளியேறியதாக, இதுவரை நான் பார்த்ததில்லை.

காங்கிரஸ் கட்சியால் ஆதரிக்கப்படும் இடதுசாரிகள் தான், சிறுபான்மையினர் சித்திரவதை செய்யப்படுகிறார்கள், படுகொலை செய்யப்படுகிறார்கள், அடித்துக் கொல்லப்படுகிறார்கள், இந்தியாவில் பாதுகாப்பாக இல்லை என்று தொடர்ந்து பிரசாரம் நடத்தி வருகின்றனர். அது கண்டிக்கத்தக்கது.

ஒருவர் சிறுபான்மையினராக இருந்தாலும் சரி, பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, சட்டத்தின் முன் அனைவரும் சமம். பெரும்பான்மை சமூகம் எதைப் பெற்றாலும், சிறுபான்மை சமூகங்களும் அதைப் பெறுகின்றன. ஆனால் சிறுபான்மையினர் பெறும் சில விஷயங்கள், பெரும்பான்மை சமூகத்திற்கு கிடைக்காது. இன்று, ஒவ்வொரு பழங்குடி சமூகமும், ஒவ்வொரு சிறுபான்மை சமூகமும் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பாக உள்ளது, ஏனெனில் பெரும்பான்மை ஹிந்து சமூகம் மதச்சார்பற்றதாகவும், இயற்கையாக சகிப்புத்தன்மையோடு இருக்கிறது.அதனால்தான் இந்தியா ஒவ்வொரு சிறுபான்மை சமூகத்திற்கும் விருப்பமான இடமாக உள்ளது. இதை நாம் பாராட்ட வேண்டும்.

இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...