மின்னணு பொருட்கள் உற்பத்தி 12 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிப்பு; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

அமெரிக்காவிற்கு ஸ்மார்ட்போன்களை வழங்கும் முன்னணி நாடாக இந்தியா மாறியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.

பெங்களூருவில் இன்று நடைபெற்ற மெட்ரோ ரயில் திட்டங்களின் தொடக்க விழாவில், அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: அமெரிக்காவிற்கு ஸ்மார்ட்போன்களை வழங்கும் முன்னணி நாடாக இந்தியா மாறியுள்ளது. மின்னணு உற்பத்தி இப்போது ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் மின்னணு உற்பத்தி ஆறு மடங்கு வளர்ந்துள்ளது. மின்னணு ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக மாறியுள்ளது. இந்த வளர்ச்சி, தொழில்நுட்ப உற்பத்திக்கான உலகளாவிய மையமாக மாறுதல், மேம்பட்ட மின்னணு சாதனங்களை இன்னும் பரவலாகக் கிடைக்கச் செய்தல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்யும் என்று யாரும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது.இந்தியாவின் செமிகண்டக்டர் தொழிற்துறையை கட்டியெழுப்ப வேண்டும் என்ற நீண்டகால கனவு 60 ஆண்டுகளுக்குப் பிறகு நனவாகி உள்ளது. இன்று, நாட்டில் ஆறு செமிகண்டக்டர் ஆலைகள் கட்டுமானத்தில் உள்ளன, மிக விரைவில் இந்த தொழிற் சாலைகளில் இருந்து முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப் வெளிவருவதைக் காண்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...