இந்தியா – சிங்கப்பூர் உறவை வலுப்படுத்த 3வது வட்டமேசை மாநாட்டில் உறுதி

இந்தியா – சிங்கப்பூர் இடையே இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில், மூன்றாவது வட்டமேசை மாநாடு டில்லியில் நேற்று நடந்தது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் – இந்தியா உறவை மேம்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள் இடையிலான இருதரப்பு பேச்சு நடந்தது.

இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடியால் முதல் சுற்று வட்டமேசை மாநாடு, 2022 செப்டம்பரில் டில்லியிலும், இரண்டாம் சுற்று வட்ட மேசை மாநாடு 2024 ஆகஸ்டில் சிங்கப் பூரிலும் நடந்தது.

இந்நிலையில், மூன்றாவது வட்டமேசை மாநாடு டில்லியில் நேற்று நடந்தது. இதில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதேபோல் சிங்கப்பூர் அரசு சார்பில், அந்நாட்டின் துணைப் பிரதமர் கான் கிம் யோங், உள்துறை அமைச்சர் சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜோசபின் டியோ, மனிதவள அமைச்சர் டான் சீ லெங், போக்குவரத்து அமைச்சர் ஜெப்ரி சியாவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இச்சந்திப்பின்போது தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், திறன் மேம்பாடு உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த சந்திப்பு, இருநாடுகளின் உறவை விரிவுப்படுத்த வழிவகுக்கும். ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில், சிங்கப்பூர் அமைச்சர்களின் ஈடுபாடு, இருநாட்டின் அரசிற்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பு அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல உதவும்’ என, தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் – இந்தியா உறவை மேம்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள் இடையிலான இருதரப்பு பேச்சு நடந்தது.

இருநாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடியால் முதல் சுற்று வட்டமேசை மாநாடு, 2022 செப்டம்பரில் டில்லியிலும், இரண்டாம் சுற்று வட்ட மேசை மாநாடு 2024 ஆகஸ்டில் சிங்கப்பூரிலும் நடந்தது.

இந்நிலையில், மூன்றாவது வட்டமேசை மாநாடு டில்லியில் நேற்று நடந்தது. இதில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதேபோல் சிங்கப்பூர் அரசு சார்பில், அந்நாட்டின் துணைப் பிரதமர் கான் கிம் யோங், உள்துறை அமைச்சர் சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜோசபின் டியோ, மனிதவள அமைச்சர் டான் சீ லெங், போக்குவரத்து அமைச்சர் ஜெப்ரி சியாவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இச்சந்திப்பின்போது தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், திறன் மேம்பாடு உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த சந்திப்பு, இருநாடுகளின் உறவை விரிவுப்படுத்த வழிவகுக்கும். ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில், சிங்கப்பூர் அமைச்சர்களின் ஈடுபாடு, இருநாட்டின் அரசிற்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பு அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல உதவும்’ என, தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...