டிரம்புடன் பேசிய விஷயங்கள் மோடியிடம் பகிர்ந்தார் புடின்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் நடத்திய பேச்சு குறித்த விபரங்களை, பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று பகிர்ந்து கொண்டார்.

‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து, ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா 2022ல் போர் தொடுத்தது.

இந்த போரை நிறுத்த உலக நாடுகள் பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றன. உக்ரைன் உடனான போரை நிறுத்துவது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 15ம் தேதி பேசினார். அமெரிக்காவின் அலாஸ்கா வில் நடந்த பேச்சில் எந்த முடி வும் எட்டப்படவில்லை.

இந்நி லையில், டிரம் புடனான பேச்சு குறித்த தகவல்களை , பிரதமர் நரேந்திர மோடியிடம், தொலைபேசி வாயிலாக அதிபர் புடின் நேற்று பகிர்ந்து கொண் டார்.

இ து குறித்து பிரதமர் மோடி தன் சமூக வலைதளத்தில் கூறுகையில், ‘என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அலாஸ்காவில் நடந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பு குறித்த தகவலை பகிர்ந்த என் நண் பரான ரஷ்ய அதிபர் புடினுக்கு நன்றி.

‘உக்ரைன் போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கும். நம் தொடர்ச்சியான பேச்சு, பரிமாற்றம் வரும் நாட்களிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்’ என, தெரிவித்துள்ளார்.

இருப்பினும், டிரம்ப் – புடின் இடையே நடந்த பேச்சு குறித்த விபரங்களை பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...