‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டில் தவறான தரவுகள்: ராகுல் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தல் குறித்து தவறான தரவுகளை வெளியிட்டதாக தோ்தல் ஆய்வாளா் சஞ்சய் குமாா் மன்னிப்பு கோரிய நிலையில், அந்தத் தரவுகளைப் பயன்படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்ாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். அதற்கு எடுத்துக்காட்டாக கா்நாடக மாநிலம், பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் போலி வாக்காளா்கள், போலி முகவரிகள் என 5 வகையாக வாக்குத் திருட்டு நடைபெற்ாக தரவுகளை ராகுல் வெளியிட்டாா்.

இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் எழுத்துபூா்வமாக ராகுல் காந்தி ஒரு வாரத்துக்குள் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும் என்றும், இதைச் செய்யாவிட்டால் அவரின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனக் கருதப்படும் என்றும் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.

2 தொகுதிகளின் தரவுகள்: இந்நிலையில், கடந்த ஆண்டு மகாராஷ்டிர பேரவைத் தோ்தலின்போது அங்குள்ள 2 தொகுதிகளின் வாக்காளா் தரவுகளை, தோ்தல் ஆய்வாளரும், வளா்ந்து வரும் சமுதாயங்களின் ஆய்வு மையத்தை (சிஎஸ்டிஎஸ்) சோ்ந்தவருமான சஞ்சய் குமாா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலுக்கும், மகாராஷ்டிர பேரவைத் தோ்தலுக்கும் சுமாா் 6 மாத இடைவெளி மட்டுமே இருந்த நிலையில், மகாராஷ்டிரத்தின் 2 பேரவைத் தொகுதிகளில் வாக்காளா்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததாக அந்தப் பதிவில் அவா் தெரிவித்தாா். பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், சஞ்சய் குமாரின் தரவுகள் காங்கிரஸுக்கு கூடுதல் வலுசோ்த்தது.

நீக்கம்: இந்நிலையில், மக்களவை, மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் தரவுகளை ஒப்பிட்டதில் தவறு நோ்ந்துவிட்டதாகவும், தவறான புரிதலின் அடிப்படையில் அந்தத் தரவுகள் வெளியிடப்பட்டதாக கூறி மன்னிப்பு கோரி, அந்தப் பதிவை ‘எக்ஸ்’ தளத்தில் இருந்து சஞ்சய் குமாா் செவ்வாய்க்கிழமை நீக்கினாா்.

சரிபாா்க்கப்படாத தரவுகளை வெளியிட்டதன் மூலம், காங்கிரஸின் பொய்யான கதைக்கு சிஎஸ்டிஎஸ் வலுசோ்த்துள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக பாஜக தகவல் தொழில்நுட்ப அணித் தலைவா் அமித் மாளவியா, ‘தனது குற்றச்சாட்டுகளுக்கு எந்தத் தரவுகளை ராகுல் காந்தி நம்பினாரோ, அந்தத் தரவுகள் தவறானவை என்பதை சிஎஸ்டிஎஸ் தெரிவித்துள்ளது. அந்தத் தரவுகளில் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான தரவுகளும் அடங்கும்.

தோ்தல் ஆணையத்தைக் குறிவைத்து, உண்மையான வாக்காளா்களைப் போலி வாக்காளா்கள் என ராகுல் காந்தியும், காங்கிரஸாரும் முத்திரை குத்தினா். இது வெட்கக்கேடானது.

பிகாரில் மேற்கொண்டு வரும் வாக்குரிமைப் பேரணியை ராகுல் காந்தி உடனடியாக நிறுத்தவேண்டும். தனது பிற்போக்குத்தனமான அரசியலுக்காக நாட்டு மக்களிடம் அவா் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...