விண்வெளியில் இருந்து பார்க்கும் போது இந்தியா தான் உலகிலேயே மிக அழகான நாடாக தெரிகிறது என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா கூறியிருப்பதாவது: அழகான, பிரகாசமான வீடியோவை பாருங்கள். சர்வதேச விண்வெளி நிலையத்தில், சுற்றுப்பாதையில் இருக்கும் போது, இந்த பயணத்தின் அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்தேன்.
இது விண்வெளியில் இருந்து பாரதத்தை எடுத்த வீடியோ. விண்வெளியில் இருந்து பார்க்கும் போது இந்தியா தான் உலகிலேயே மிக அழகான நாடாக தெரிகிறது
இந்த வீடியோவில் நாங்கள் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் பயணிக்கிறோம். நீங்கள் காணும் ஊதா நிற ஒளிரும் மின்னல்கள் நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழையில் மின்னுகின்றன.
சுற்றுப்பாதையில் சூரிய உதயத்தைக் காண்பதால் ஒளி வெள்ளமாக வரத் தொடங்குகிறது என்பதைக் காண்கிறோம். பின்னணியில் உள்ள நட்சத்திரங்களையும் கவனியுங்கள். இது உண்மையிலேயே அழகாக காட்சி அளித்தது. துரதிர்ஷ்டவசமாக நான் மழைக்காலத்தின் போது அங்கு இருந்தேன்.
இதனால் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. அந்த வீடியோ காட்சியை நீங்கள் பார்க்கிறீர்கள். நீங்கள் இதைப் பார்க்கும்போது, நீங்கள் விண்வெளி நிலையத்தில் இருந்து பார்ப்பது போல் உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வாறு சுபான்ஷூ சுக்லா கூறியுள்ளார்.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |