‘முன்பு நம்மை எதிர்த்தவர்கள் இப்போது நம் நண்பர்களாகிவிட்டனர். கடந்த காலங்களில் கூட அவர்களை எதிரிகளாக நாம் பார்த்ததில்லை,’ என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.
டில்லியில் ஆர்எஸ்எஸ் நுாற்றாண்டு விழாவின், 100 ஆண்டுகால ஆர்எஸ்எஸ் பயணம்: புதிய எல்லைகள் என்ற பெயரில் மூன்று நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தொடங்கி வைத்தார்.
மோகன் பகவத் பேசியதாவது:
முன்பு நம்மை எதிர்த்தவர்கள் இப்போது நம் நண்பர்களாகி விட்டனர். கடந்த காலங்களில் கூட அவர்களை எதிரிகளாக நாங்கள் பார்த்ததில்லை.
நமது அமைப்பு குறித்த தவறான கருத்துக்களை அகற்றவும், சுயம்சேவகர்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
பாரதிய, இந்து மற்றும் சனாதனி போன்ற வார்த்தைகள் அனைத்தும் ஒன்றே.
இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |