இந்தியாவை சர்வதேச விளையாட்டு மையமாக உருமாற்ற மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அனைவருக்கும் தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்கள். இந்த சிறப்பு தினத்தில், இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மேஜர் தயான் சந்த்திற்கு மரியாதை செலுத்துவோம்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் விளையாட்டு களம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. இளைஞர்களின் திறனை வளர்க்கும் அடிப்படை திட்டங்கள் முதல் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள் உருவாக்குவது வரை, ஒரு சிறந்த விளையாட்டு உட்கட்டமைப்புகள் உருவாகி வருவதை பார்க்கலாம்.
விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு அளிப்பது, உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது என இந்தியாவை விளையாட்டுத்துறையின் சர்வதேச மையமாக மாற்ற மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |