நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக இன்று தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.
நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், 68, தேர்வு செய்யப்பட்டார். துணை ஜனாதிபதி தேர்தலில், 452 ஓட்டுகளை பெற்று, ‘இண்டி’ கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை வீழ்த்திய அவர், டில்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிபிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்கவில்லை.
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |