இந்தியாவின் எழுச்சியை கண்டு பயப்படும் அமெரிக்கா: வரி விதிப்புக்கு மோகன் பகவத் கண்டனம்

இந்தியா வளர்ச்சி பெற்றால் தங்களுக்கு என்ன நேரிடுமோ என்ற அச்சத்தில் தான் அமெரிக்கா வரிகளை விதித்து இருப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.

நாக்பூரில் பிரம்மகுமாரிகள் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது;

இந்த உலகில் இந்தியா வலுவாக வளர்ச்சி அடைந்தால் என்ன நேரிடும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள். அதனால் தான் வரிகளை விதிக்கிறார்கள். 7 கடல்களுக்கு அப்பால் இருக்கிறாய் (அமெரிக்காவை குறிப்பிடுகிறார்). ஆனால் உனக்கு பயம் இருக்கிறது.

நாங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் அதை செய்தவரை (பாகிஸ்தான்) அவர்கள் (அமெரிக்கா) ஈர்க்கிறார்கள். அவர்கள் தங்களுடனேயே இருந்தால் இந்தியா மீது அழுத்தம் வரும் என்று நினைக்கிறார்கள்.

மக்களும், நாடும் தங்கள் உண்மையான சுயத்தை புரிந்து கொள்ளாவிட்டால், தொடர்ந்து பிரச்னைகளை சந்திப்பார்கள். நான் என்ற அணுகுமுறையில் இருந்து நாம் என்று அணுகினால் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு அமையும். இன்று உலகிற்கு தீர்வுகள் மிகவும் தேவை.

இந்தியா ஒரு சிறந்த நாடாக இருந்தாலும், இந்தியர்களும் சிறந்தவர்களாக இருக்க பாடுபட வேண்டும்.

இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...