நாட்டை கொள்ளையடிக்கிறது காங்கிரஸ்: ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

ஒடிசாவில் ரூ.60,000 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்கி வைத்​தார்.

இந்த விழா​வில் பேசிய பிரதமர் மோடி, ‘காங்​கிரஸ் கட்சி நாட்டை கொள்​ளை​யடிக்​கிறது’ என்று குற்​றம் சாட்டி உள்​ளார். ஒடி​சா​வில் முதல்​வர் மோகன் சரண் மாஜி தலை​மை​யில் பாஜக ஆட்சி நடை​பெறுகிறது. அந்த மாநிலத்​தின் ஜார்​சுகுடா நகரில் நேற்று அரசு நலத்​திட்ட விழா நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்று ரூ.60,000 கோடி மதிப்​பிலான நலத்​திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார்.

விழா​வில் அவர் பேசி​ய​தாவது: நாடு முழு​வதும் 4 கோடி ஏழை குடும்​பங்​களுக்கு கான்​கிரீட் வீடு​கள் கட்​டிக் கொடுக்​கப்​பட்டு உள்​ளன. இந்த திட்​டத்​தில் ஒடி​சா​வில் மட்​டும் 40,000 ஏழை குடும்​பங்​கள் பயன் பெற்​றுள்​ளன. ஒடி​சா​வில் புதி​தாக 2 செமி கண்​டக்​டர் ஆலைகள் அமைக்க மத்​திய அரசு அண்​மை​யில் ஒப்​புதல் வழங்​கியது. இதன்​மூலம் ஒடிசா இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும்.

கப்​பல் கட்​டு​மான திட்​டத்​துக்​காக மத்​திய அரசு சார்​பில் அண்​மை​யில் ரூ.70,000 கோடி திட்​டம் அறிவிக்​கப்​பட்​டது. இந்த திட்​டத்​தின் கீழ் ஒடி​சா​வில் கப்​பல் கட்​டு​மான தளம் அமைக்​கப்பட உள்​ளது. இதன்​மூலம் ஏராள​மான இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும். மத்​தி​யிலும் நாடு சுதந்​திரம் அடைந்​தது முதல் காங்​கிரஸ் கட்​சி, நாட்டை கொள்​ளை​யடித்து வந்​தது. கடந்த 2014-ம் ஆண்டு மத்​தி​யில் பாஜக ஆட்சி அமைக்க மக்​கள் வாய்ப்பு வழங்​கினர். இதன் மூலம் காங்​கிரஸின் கொள்ளை தடுத்து நிறுத்​தப்​பட்​டது.

கடந்த காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் அத்​தி​யா​வசிய பொருட்​கள் மீது அதிக வரி விதிக்​கப்​பட்​டது. உதா​ரண​மாக ஒரு குடும்​பத்​தில் ஓராண்​டுக்கு ரூ.1 லட்​சம் செலவு செய்​தால், ரூ.25,000 வரி செலுத்த வேண்​டிய சூழல் இருந்​தது. பாஜக ஆட்​சிக் காலத்​தில் இந்த வரி ரூ.5,000 ஆக குறைந்​திருக்​கிறது. இதன்​மூலம் ஏழை, நடுத்தர வர்க்க மக்​கள் மிகுந்த பலன் அடைந்​துள்​ளனர்.

காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் மக்​களின் பணம் கொள்​ளை​யடிக்​கப்​படு​கிறது. எனவே காங்​கிரஸ் மற்​றும் அதன் கூட்​டணி கட்​சிகளிடம்​ இருந்​து பொது​ மக்​கள்​ வில​கி இருப்​பது நல்​லது. திருப்பதி, பாலக்காடு உள்ளிட்ட 8 ஐஐடிகளில் ரூ.11,000 கோடி யில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் இந்த ஐஐடிகளில் கூடுதலாக 10,000 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர தெரிவித்தார். இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...